Saturday 22 March 2014

ஓவியர்.திருப்பூர் சிராஜ்
ஓவியர்.திருப்பூர் சிராஜ், திருப்பூரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்மையான ஓவியராக திகழ்பவர். பல்வேறு மாதாந்திர, வாரந்திர, பத்திரிக்கைகளில் அட்டை ஓவியங்களையும், வண்ண ஓவியங்களையும், வரைந்துள்ளார். இதுவரை தனியாகவும், பல ஓவியர்களுடன் இணைந்தும் 13-க்கும் மேற்பட்ட ஓவியக்கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனந்தவிகடன் தானே புயல் நிவாரண நிதிக்காக நான்கு ஓவியங்களை வழங்கியுள்ளார். இவரது ஓவியங்கள் உலகமெங்கும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபுநாடுகள், மற்றும் ஆப்பிரிக்க நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் விற்பனையாகியுள்ளது.