Friday 7 February 2014

ஓவியர் திரு.M மணிராஜ்




ஓவியர் மணிராஜ் திருப்பூரில் பிறந்தவர். காலம்சென்ற ஓவியர். திரு.வரதனின் ஓவியங்களைப் பார்த்து ஓவியம் கற்றுக்கொண்டவர், பதிமூன்று வயதிலேயே விளம்பர போர்டுகள் வரைவதில் மிகத் திறமையானவர் எனப்பெயர் பெற்றவர். இன்றுவரை கோவையின் ஓவியர்கள் மத்தியில் தனிப்புகழோடு திகழ்பவர். 1997 -ஆண்டு கோவைமாவட்ட தொழில்துறை ஓவியர்கள் சங்கம் இவருக்கு, ஓவியக்கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. சென்னை லலித்கலா அகடமியில் உறுப்பினராக உள்ளார். விகடன் பிரசுரம் நடத்திய தானே புயல் நிவாரண நிதி ஓவியக் கண்காட்சியில் பங்கேற்று நற்சான்றிதழ் பெற்றவர். கோவை, மைசூர், பெங்களூர், போன்ற நகரங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றவர்.