Wednesday 12 December 2012

ஓவியர். திரு.T.மதி


ஓவியர். திரு.T.மதி அவர்கள்,
35 ஆண்டுகளாக ஓவியராக வாழ்பவர்.

சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பட்டயம் பெற்றவர்.

சென்னை, பெங்களூர், மற்றும் கோவையில் பல ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.

1975 - ம் ஆண்டு விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட் வழங்கிய சிறந்த ஓவியத்திற்க்கான விருதும்,

2012 - ம் ஆண்டு கோவை கான்டம்லேட் ஆர்ட் கேலரியின் பரிசையும் வென்றவர்.

கல்கி, அரும்பு, போன்ற வார இதழ்களிலும், தினமலர், ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களிலும் இவரைப் பற்றிய கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் பிரசுரமாகியுள்ளது.